“அந்த சில நிமிடங்கள்……”
பிரகாஷ் ஹரி போட்ஸ்வானாவில் வசிக்கும் என் நெருங்கிய நண்பர்.அருமையான கானுயிர் புகைப்படக் கலைஞர்.
சென்ற வருடம் ( 2018) டிசம்பரில் அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது,என்னை போட்ஸ்வானாவருமாறு வருந்தி அழைத்தார்.அவர் அழைப்பின் பெயரில் இந்த வருடம் (2019 ) ஏப்ரல் இறுதியில் ஈஸ்டர் விடுமுறைக்குபோட்ஸ்வானா சென்றேன்.
போட்ஸ்வானாவிற்கு நேரடி ஃபிளைட் இல்லாதலால், தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் வழியேசெல்ல நேர்ந்தது. ஜோகனஸ்பர்க்கில் ஒரு இரவு மிகவும் ரம்மியமாகக் கழிந்தது.
அங்கு ஒரு இனிய சம்பவம். அந்த ஏர்போர்ட்டில் ஒரு ஆப்பிரிக்க இளைஞன்,போவோர்வருவோரையெல்லாம்,PLEASE VISIT MY WONDERFUL OFFICE என்று அன்புடன் அழைத்துக் கொண்டிருந்தான்.
என்னவென்று போய்ப் பார்த்தால்,அது அவன் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்க்கும்கழிப்பறை. அவனைப் பொறுத்த வரையில் அதுதானே அவனுக்கு அலுவலகம். கண்ணாடி போலப்பள பளவென்று வைத்திருந்தான்.
அது மட்டுமல்லாமல் ,அங்கிருந்து வெளியில் வரும் அனைவரிடமும் கஸ்டமர் ஃபீட்பேக் வேறு கேட்டுக்கொண்டிருந்தான். அவன் பேசிய விதத்தில் இருந்து,அவன் தன்னுடைய வேலையை எவ்வளவு தூரம்நேசிக்கிறான் என்பது புரிந்தது. அவனுடைய அணுகுமுறையில் இருந்து இதை அவன் யார்சொல்லியும் செய்வது போலத் தெரியவில்லை.
அதேபோல்,அனைவரும் அவனுக்கு ஒன்று முதல் 10டாலர் வரை சந்தோஷத்துடன் கொடுத்து விட்டுச் சென்றதையும்பார்த்தேன்.
கென்யா மக்களும் இதே போல்தான். என்ன வேலை செய்தாலும் , அதை ரசித்து,ருசித்து ஆனால்ஸ்லோமோஷனில் செய்து முடிப்பார்கள். செய்யும் வேலை மிகவும் திருத்தமாக இருக்கும்.அன்பளிப்பாக என்ன கொடுத்தாலும்,சந்தோஷமாக முக மலர்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள்.
சரி …மேட்டருக்கு வருவோம்.
போட்ஸ்வானா இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அற்புதமான நாடு. எங்கு திரும்பினாலும் பச்சைபசேலென்று மரங்களும்,காடுகளும் கண்ணைப் பறிக்கின்றன.
அங்கெல்லாம் யாரும்,தண்ணீருக்குள்ளோ,அல்லது குடத்துக்குள்ளோ நின்று கொண்டு யாகம்செய்வது போல் தெரியவில்லை. உலக உருண்டை பொம்மையை சுற்றிக் கொண்டு அதில் தண்ணீர்ஊற்றி போட்ஸ்வானாவிற்கு (மட்டும்) மழை வர வேண்டுமென்றும் பிரார்த்திப்பதில்லை. இன்னும் அவர்களுக்கு அந்த அட்வான்ஸ்ட் டெக்னாலஜி தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஆனால்,மழை மட்டும் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. (சும்மா…தோணுச்சு சொன்னேன். கோவிச்சுக்காதீங்க.).
நான் சென்ற வனத்தின் பெயர் சோபே ( Chobe) . கென்யாவில் உள்ள வெட்ட வெளி காடுகள் போலன்றி,சோபே நிறைய மரங்களுடன் பேராண்மை படத்தில் வரும் காடு போல மிகவும் அழகாகவும் ,கண்ணுக்கு குளுமையாகவும் உள்ளது.
இங்குள்ள சோபே ஆறு, போட்ஸ்வானாவையும், பக்கத்து நாடான நமீபியாவையும் பிரிக்கிறது.இந்த ஆற்றில் போட் சஃபாரி செல்லும்போது,இரண்டு நாட்டுப் பகுதிகளிலும் திரியும் விலங்குகளைப்பார்த்து ரசிப்பது ஒரு சுகமான அனுபவம்.
இரண்டு நாட்டுப் பகுதிகளிலும் ஏராளமான யானைகளும், நீர் யானைகளும் , முதலைகளும், வாட்டர் பக்எனப்படும் மான்வகைகளும் வஞ்சகமில்லாமல் வளைய வருகின்றன.
நானும் பிரகாஷூம், காலையில் ஆற்றுக்குள் போட் சஃபாரி சென்றால் மாலையில் காட்டுக்குள் ஜீப் சஃபாரிஎன்று மாறி மாறி சென்றோம். மிகவும் அருமையான அனுபவம்.
அன்றும் வழக்கம்போல் அதிகாலை 5.30 மணி அளவில் பிரகாஷ்தான் முதலில் எழுந்து என் அறைக் கதவைத் தட்டி இன்று எங்கே போவோம் என்று கேட்டார்.
வழக்கம்போல் என் நாக்கில் சனி அமர்ந்து “ போட் சஃபாரி” என்று சொல்ல வைத்தது.
கிளம்பினோம்.
கிளம்பி சிறிது நேரத்தில்,இந்தப் படத்தில் உள்ள யானையைப் பார்த்தோம். தன் உடல் சூட்டைத் தணிக்க,தண்ணீரையும்,சேற்றையும் வாரி இறைத்து ஜலக்ரீடை செய்து கொண்டு இருந்தது.
உடனே போட்டை ஓட்டி வந்தவரிடம் கரையில் ஒதுங்கச் சொன்னோம். அவனும் மிகவும் சேஃபான ஒரு தூரத்தில்தான் நிப்பாட்டினான்.
நான் பொதுவாக எந்தக் காட்டிற்குச் சென்றாலும்,அந்தக் காட்டின் விதி முறைகளை மீற மாட்டேன். எந்தக் காரணத்தைக் கொண்டும்,வண்டியையோ ,போட்டையோ ஓட்டி வருபவர்களை என் வழியில் வரச் சொல்லி கட்டாயப் படுத்த மாட்டேன். காரணம் அவர்களுக்குத் தான் தெரியும் அந்தக் காட்டின் நிலவரம்.
எனவே ,அவன் எங்கு நிப்பாட்டினாலும் சரி,அங்கிருந்தே படம் எடுப்போம் என்று முடிவு செய்தோம். எங்கள் அதிர்ஷ்டத்திற்கு ( ????????) மிகவும் அழகான பொசிஷன் கிடைத்தது. நான் என் கேமராவை எடுத்து அந்த யானையை விதம் விதமாக சுட்டுத் தள்ளி விட்டேன் ( என் கேமராவில்தாங்க). அதுவும் சலிக்காமல்,அங்கிருந்த ஒரு சிறு குட்டையில் விழுந்து எழுந்து வித விதமாக போஸ் கொடுத்தது.
சிறிது நேரம் கழித்து அது மெதுவாக எழுந்து நாங்கள் இருக்கும் திசையில் நடந்து வர ஆரம்பித்தது. எனக்கு என்ன தோன்றியது எனத் தெரியவில்லை. என் கேமராவை கீழே வைத்து விட்டு,என்னுடைய ஐ ஃபோனில் வீடியோ எடுக்க ஆரம்பித்து விட்டேன். மிகச் சரியாக அதே நேரத்தில் என் நண்பர் பிரகாஷ்,தன்னுடைய கேமாராவில் வைட் ஆங்கிள் லென்ஸை மாற்றி,அதன் வருகையை தொடர்ந்து எடுக்க ஆரம்பித்தார்.
நாங்கள் இருவரும் போட்டின் விளிம்பில் நின்று கொண்டு தலைவர் ஆடி ஆடி வருவதை படமும் வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தோம். என்னுடைய முழுக் கவனமும் ஃபோனின் ஸ்க்ரீனிலும்,பிரகாஷின் கவனம் முழுவதும் கேமராவின் வ்யூ ஃபைண்டரிலுமே இருக்க ,தலைவர் எங்கள் அருகில் வந்து நிற்பதை நாங்கள் இருவருமே கவனிக்கவில்லை.
எங்கள் போட் டிரைவர் மிகவும் மெலிதான குரலில் சிட் டௌன் சிட் டௌன் என்று எச்சரிக்க,எங்கள் இருவரின் காதுகளிலும் அது கொஞ்சம் கூட விழவில்லை.
அப்போது நேரம் காலம் புரியாமல் நான் ,“ நான் வீடியோவை ஸ்லோ மோஷனில் எடுத்துக் கொண்டிருக்கிறேன் “ என்றேன். உடனே பிரகாஷ்,“ எனக்கு வைட் ஆங்கிள் ஷாட்ஸ் நன்றாக வந்திருக்கிறது” என்றார் ரசித்து ருசித்து.
இனிமேலும் பொறுக்க முடியாது என்று எங்கள் டிரைவர் ,“ சிட் டௌன்” என்று கத்த,அப்போதுதான் நாங்கள் இருவருமே நிமிர்ந்து பார்த்தோம். அந்த யானை மிகச் சரியாக எங்களுக்கு இரண்டு அடி தூரத்தில் எங்களை முறைத்தவாறே நின்று கொண்டிருந்தது.
ஒரு நொடியில் எங்கள் இருவரின் சப்த நாடியும் நடுங்கி விட்டது. என் கையில் இருந்து ஃபோனும்,பிரகாஷ் கையில் இருந்து கேமாராவும் எங்கள் அனுமதியில்லாமலேயே கீழே விழ ,டமாலென்று கீழே உட்கார்ந்தோம்.
என் மனைவி செய்த புண்ணியமோ,இல்லை பிரகாஷ் செய்த புண்ணியமோ,எங்களுக்கும் ,தலைவருக்கும் இடையே போட்டில் கட்டப்பட்டிருந்த ஒரு கயிறு ஒன்று இருந்தது. அதை எலெக்ட்ரிக் ஃபென்ஸ் என்று நினைத்திருக்க வேண்டும். எனவே,தும்பிக்கையை உள்ளே போட்டின் உள்ளே நுழைத்து எங்கள் இருவரையும் தூக்கி அடிப்போமா வேண்டாமா என்று பயங்கர குழப்பத்தில் தவித்தது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
தும்பிக்கையை உள்ளே லேசாக கொண்டு வருவதும் ,வெளியே கொண்டு செல்வதுமாக அதற்குள் நடந்த போராட்டம்,எங்கள் இருவருக்கும் வாழ்வா சாவா என்ற போராட்டமாக அமைந்து விட்டது.
தலைவர் அ
ங்கே நின்று கொண்டிருந்த “ அந்த சில நிமிடங்கள்” ,நான் நரகத்தின் வாசலிலும்,பிரகாஷ் சொர்க்கத்தின் வாசலிலும் நின்று கொண்டு “ மே ஐ கம் இன் ?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம்.
அங்கிருந்து “ நோ…நாட் யெட்” என்ற உத்தரவு வந்திருக்க வேண்டும். உடனே நம்ம தலைவர் மெதுவாக ஆடி அசைந்து எங்களை விட்ட நகர ஆரம்பித்தார்.
அவ்வளவு நேரம் நாங்கள் இருவரும் மூச்சே விடாமல் இருந்தது அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க எங்கள் இருவருக்கும் அப்போதுதான் உயிரே வந்தது.
எனக்கு,இதற்கு முன்னால் இரண்டு முறை யானையும்,ஒரு முறை தண்ணீருக்குள் நீர் யானையும் துரத்தி இருந்தாலும்,இவ்வளவு க்ளோஸ் என்கவுண்டர் இதுவே முதல் முறை….
எங்கள் டிரைவர் ,“இதுவரை சோபேயில் யானை யாரையுமே தாக்கியதில்லை….” என்று சொல்லி விட்டு அந்த யானையையே வெறித்துப் பார்த்தார்.
அந்தப் பார்வையின் அர்த்தம்….
” அந்த யானை மட்டும் உங்களை துவசம் செய்திருந்தால், நம்ம சங்கர் சிமெண்ட் விளம்பரத்தில் வருவது போல….. நீங்கதான் ஃபர்ஸ்ட் “.
ஊஊஊஊஊஊஊஊஊ………
வெ.பாலமுரளி.