நேற்று இரவு வழக்கமான என்னுடைய அரைத் தூக்கத்தில் கடவுள் வந்தார்.
பார்ப்பதற்கு நம்முடைய சிவன் மாதிரியும் இல்லாமல், அல்லா மாதிரியும் இல்லாமல், இயேசு மாதிரியும் இல்லாமல், ஒரு மாதிரி வித்தியாசமாக இருந்தார் (இவர்தான் ஒரிஜினல் என்று நினைக்கிறேன்) .
மகனே நீ செய்யும் பணியை (?????????????? ) மெச்சினேன், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். “நீ செய்யும் பணியை மெச்சினேன்” என்று சொன்னவுடனேயே எனக்கு அவர் உண்மையான கடவுள்தானா என்று ஒரு டவுட் ( எப்படி நாம் செய்த பாவமெல்லாம் அவருக்குத் தெரியாமல் போச்சு என்ற சந்தேகம் வேற அரித்தது. ஒரு வேளை அவரும் Anti Virus Software வைத்திருப்பாரோ ?).
” இல்ல சாமி , அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என்றேன்.அவரும் விடாமல் ” பரவாயில்லை. உனக்கு இன்னொரு மனிதப் பிறவி அருள்கிறேன்” என்றார்.
” இன்னொரு பிறவியாஆஆஆஆஆஆஆஆஆஆ?” என்று அலறிக் கொண்டே எழுந்து விட்டேன்.இந்த நைரோபி குளிரிலும் படு பயங்கரமாக வியர்த்திருந்தது.
மணியைப் பார்த்தேன் – இரவு 1.30உள்ள தூக்கமும் போச்சா ……….
வெ. பாலமுரளி
பி.கு:
நெடு நாள் தவம் இருந்தேன் .
கடவுளும் தோன்றினார்
பக்தா…உன் பக்தி மெச்சினோம்
என்ன வரம் வேண்டும் ? கேள் என்றார் .
இது தெரியாத நீர் என்ன கடவுள் என்றேன்
ந. பிச்சமூர்த்தி எழுதிய கவிதை. எப்போதோ படித்தது . இப்போது ஞாபகம் வந்தது.