முள்றியின் டைரி : 25 நானும் ஒரு தேசாந்திரி – I

எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரியில் ” சத்னாவில் ஓர் இரவு” என்று ஒரு கட்டுரை எழுதியிருப்பார் . படித்திருக்கிறீர்களா ? அவர், ஒரு மொழி தெரியாத ஊர் ஒன்றுக்குச் செல்லும்போது , உடல் நலம் சரியில்லாமல் போய் அவஸ்தைப்பட்ட அனுபவமே ” சத்னாவில் ஓர் இரவு” .  எனக்கு இந்த முறை சைனாவில் கிட்டத்தட்ட அதே Experience – இன்னும் கொஞ்சம் கேவலமாய். 

எனக்கு சைனாவில் 2 மெஷின்கள் வாங்க வேண்டியிருந்தது. அவை போக, அங்கிருந்து ஒரு புது Product   (  Fresh Milk Dispensers)  கொண்டு வந்து கென்யாவில்  Trading  பண்ணும் பிளான் ஒன்றும் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக,  Personal Reason  ஒன்றும் இருந்தது. நான் இது வரை ஐந்தாறு முறை சைனா சென்றிருந்தாலும், இதுவரை  Great Wall of China வும்  Forbiden City – யும் சென்றதில்லை. அதுவும் பனி மூட்டத்திற்கு நடுவில் China Wall – ஐப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு.மார்ச் மாத நடுவில் அது போல பனி மூட்டம் இருக்கும் என்று அறிந்து அதற்கேற்றாற்போல்  திட்டமிட ஆரம்பித்தேன்.  

கிளம்புவதற்கு முதல் நாள்  Lens , Polarizer,  Graduated ND Filters, Travel Tripod  எல்லாம் பார்த்து பார்த்து எடுத்து வைத்தேன். அப்போதே என் மனைவிக்கு சந்தேகம். நீங்கள் பேக் பண்ணுவதைப்  பார்த்தால் பிஸினஸ் ட்ரிப் போவது போலத் தெரியவில்லையே, ஏதோ போட்டோ டூர் போவது போல அல்லவா இருக்கிறது என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டாள்   ( எப்படித்தான்  Mind Reading  பண்ணுவாய்ங்கெளோ?) . ஒரு நல்ல கேமரா மேன் ( ஹி..ஹி…ஹி…என்னைத்தான்) எப்போதுமே கேமராவுடன் இருக்க வேண்டும். ட்ராவல் பண்ணும்போது திடீரென்று ஒரு நல்ல காட்சி தென்படலாம். அப்போது , ஐயோ கையில்  கேமரா இல்லையே என்று வருந்தக் கூடாதல்லவா, அதுதான் என்று சமாளிக்க முயற்சி  செய்தேன் . அவள் வாய் OK  என்று சொன்னாலும் , முகம் ” உன்னை 1% கூட நம்பவில்லை” என்றது.  

 கிளம்பும் அன்று காலையில் தொண்டை லேசாக அறுத்தது –  Flu  வருவதற்கான அறிகுறி போல.      அது போல எனக்கு அடிக்கடி வரும் என்பதால், Listerin Mouth Wash  போட்டு தொண்டையில் படுமாறு நன்கு கொப்பளித்து விட்டு , ஒரு  Crosin ( Paracetamol)  மட்டும் போட்டுக் கொண்டு விமானம் ஏறி விட்டேன். லேசாகக் காய்ச்சல் ஆரபித்தது. அதனால்தானோ என்னவோ விமானத்தில் நன்கு உறங்கி விட்டேன் ( எனக்குப்  பொதுவாக விமானத்தில் உறக்கம் வராது. எவ்வளவு நேரப் பயணமாக இருந்தாலும் சரி , கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டேயிருப்பேன்). 

மறு நாள் மதியம்  Guangzhou –  வில் இறங்கும் போது நான் செய்த தவறு எனக்குப் புரிந்தது. காய்ச்சல் உச்சத்தில் இருக்க , தலை படு பாரமாக இருக்க, உடம்பு முழுவதும் முறுக்கி முறுக்கி வலிக்க ஆரம்பித்து. பத்தாததற்கு  Immigration – இல்  கிட்டத்தட்ட 2 மணி நேரம் க்யூவில் வேறு  நிற்க வேண்டி வந்து விட்டது. மயக்கம், இப்ப வரவா இல்லை கொஞ்சம் நேரம் கழித்து வரவா என்று கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. அடித்துப் பிடித்து ஹோட்டலுக்கும் போய் விட்டேன். ஏதோ சொல்லி வைத்தாற்போல நான் ரூமில் நுழைந்தவுடன், விமானத்தில் சாப்பிட்ட அனைத்தும் வாந்தி வடிவில் வெளிவர , சற்றும் தாமதிக்காமல் மயக்கம் வேறு வந்து விட்டது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்படியே கிடந்திருப்பேன் என்று நினைக்கிறேன். நினைவு வரும்போது , நம்ம பழைய தமிழ் சினிமாவில் வருவது போல ” நான் இப்போ எங்கேயிருக்கேன்” என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். சைனா என்று ஞாபகம் வந்ததும், “ஆகா நன்றாக மாட்டிக் கொண்டோமே” என்பது புரிந்தது. உடனே , ஹோட்டல் ரிசப்ஷனுக்கு போன் பண்ணி ” ஒரு டாக்டரை வரவழைக்க முடியுமா ” என்று கேட்டேன்.  ஒரு பத்தே நிமிடத்தில் ஆங்கிலம் தெரியாத ஒரு மருத்துவர் வந்தார். அவருக்கு சைகையிலேயே என் பிரச்சினையை விளக்கினேன். அவருக்கு என்ன புரிந்ததோ, ஒரு சில மருந்துகள் கொடுத்து விட்டு, நன்றாக உறங்கு என்று அவரும் சைகையிலேயே  சொல்லி விட்டுப் போய் விட்டார். எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை. ஒன்றும் சாப்பிடாமலேயே அவர் கொடுத்த மருந்தை மட்டும் சாப்பிட்டு விட்டு உறங்கி விட்டேன்.

மறுநாள் காலையில் எழுந்திருக்கும் போது , தலைதான் கொஞ்சம் சுற்றியதே தவிர மற்றபடி வேறு பிரச்சினை ஒன்றும் இல்லாத மாதிரித்தான் இருந்தது (இது போல யாராவது ” தலை சுற்றுகிறது”  என்று என்னிடம் சொன்னால், கொஞ்சம் கூட யோசிக்காமல் , “நீங்க ரொம்ப லக்கி சார், உங்க முதுகை நீங்களே பார்த்துக் கொள்ளலாம்” என்று நக்கலடிப்பேன் . அன்று ஏனோ என் முதுகை என்னால் பார்க்க முடியவில்லை ) .  

என்னுடன் உடன் பிறந்த கொழுப்பின் காரணமாக ஒரு வாடகைக் காரை எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 400 கி.மீ. பயணம் செய்து அங்கு உள்ள என்னுடைய வேலையை எல்லாம் முடித்தேன். இது இரண்டாவது தவறு. அதன் பலன், மதியம் 2 மணி வாக்கில் தெரிந்தது. வண்டியை நிறுத்தச் சொல்லி விட்டு கீழே இறங்கி அன்று காலை சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்தேன். பழையபடி தலை பாரம், உடம்பு வலி , காய்ச்சல் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது – இந்த முறை வறட்டு இருமலும் சேர்ந்தே வந்தது. அத்தோடு மீதமிருந்த ஒரு மீட்டிங்கையும் முடித்து விட்டு , திரும்ப  Guangzhou திரும்பும்போது மணி மாலை 7. மறுபடியும் ஒன்றும் சாப்பிடாமல் மருந்துகளை மட்டும் முழுங்கி விட்டு ஏராளமாக தண்ணீரை  மட்டும் குடித்து விட்டு உறங்கி விட்டேன். 

அன்று இரவுதாங்க என்னுடைய உடல்நிலை ரொம்ப மோசமாக ஆரம்பித்தது. இரவு ஒரு மணி வாக்கில் அசுரத்தனமான வறட்டு இருமல் ஆரம்பித்தது. உடம்பு எனக்கென்ன உனக்கென்ன என்று கொதிக்க , தலையில் ஏதோ ஒரு அம்மிக்கல்லை இறக்கி வைத்தாற்போல பாரமாக இருக்க , நடு நெஞ்சு கொடுமையாக வலிக்க ஆரம்பித்து. இருமும்போது நெஞ்சைப் பிடித்துக் கொள்வதா, தலையைப் பிடித்துக் கொள்வதா என்று இனம் புரியாத  ஒரு அவஸ்தை.

(வழக்கம்போல) நரகத்தில் உள்ள கிங்கரர்கள் எல்லோரும்  என் கண்ணுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தார்கள். அதிலும் ஒரு Mr .  கிங்கரர் என்னை என்னவோ ரொம்ப நாள் தெரிந்தது போல ” Hi Bala. How are you ? Welcome (back) to The hell”  என்று தன்னுடைய  Hospitality – யைக் காண்பித்தார். நான் ” ம்க்கும் …ரொம்ப முக்கியம்” என்று நினைத்துக் கொண்டு அவரைத் தாண்டி உள்ளே எட்டிப் பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டீங்கங்க . நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பது போல அங்கு ஒண்ணும் எண்ணெய் கொப்பறை, சாட்டை அடி எல்லாம் ஒன்றும் கிடையாதுங்க . ஆனால் ஏராளமான மனிதர்கள் பேண்ட், சட்டையிலும், சுரிதார்களிலும் ( ????) ரொம்ப சோகமாக உலாத்திக் கொண்டிருந்தார்கள் ( ஒருவேளை இது    நம்ம பில் கேட்ஸ் பார்த்த  Scree Saver –  ஓ ?) .  

எனக்கு ஏதோ பயம் ஒன்று தொற்றிக் கொள்ள , அடித்துப் பிடித்து ஓடியாந்து விட்டேன். நான் பூமியில் கால் வைப்பதற்கும், எனக்கு சடாலென்று முழிப்பு வருவதற்கும் சரியாக இருந்து. அப்போதுதான்  கவனித்தேன், நான் இருமல் தாங்க முடியாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டே  கட்டிலில் இருந்து கீழே விழுந்து , விழுந்தது கூடத் தெரியாமல்  தரையிலேயே ஒரு ஏடா கூடமான ஒரு  Position –  இல்  சிறிது நேரம் உறங்கியிருக்கிறேன் என்பது. அந்தக் குறுகிய நேரத்தில் தான் மேற்கூறிய    ” Short Visit   to The Hell “.  வாட்சைப் பார்க்க, மணி 4 என்று  கலங்கலாகத் தெரிந்தது.  பயத்தின் காரணத்தினாலா , இல்லை உடல் நிலை காரணத்தாலா , இல்லை வயிற்றில் ஒன்றும் இல்லாத காரணத்தாலா என்று  சரியாகத் தெரியவில்லை. கை , காலெல்லாம் வெட வெட என்று ஆட தலை சுற்றி மறுபடியும் படுக்கையில் விழுந்தேன்.  மறுபடியும் முழிப்பு வரும்போது காலை மணி 10. 

அன்று செய்ய வேண்டிய வேலைகள்  அனைத்தையும் கேன்சல் செய்து விட்டு, பல் விலக்கி, முகம் மட்டும் கழுவி விட்டு ஏதாவது சாப்பிட்டு விட்டு வரலாம் என்று கீழே  ரெஸ்டாரெண்ட்   சென்றேன். இரண்டே இரண்டு பிரட் டோஸ்ட்டும் ஒரு டம்ளர் பாலும் மட்டும் உள்ளே தள்ளி விட்டு ரூமிற்கு வந்து மாத்திரைகள் விழுங்கி விட்டு மறுபடியும் படுக்கையில் விழுந்தேன். அன்று இரவு 8 மணிக்கு பீஜிங் செல்ல பிளைட் . இந்தத் தலைச் சுற்றலோடும், காய்ச்சலோடும் எப்படி பிரயாணம் பண்ணப் போகிறோமோ என்று நினைக்கும்போது தலை இன்னும் வேகமாக சுற்றுவது போல இருந்தது. வயிற்றில் சிறிது சென்றவுடன் லேசாக ஒரு தெம்பு வருவது போலவும்  இருந்தது. ஆனாலும் அசதி ஒன்றும் குறையவில்லை. உறக்கமும் இல்லாமல், மயக்கமும் இல்லாமல் ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தேன். அப்போதுதான் பீஜிங்கில் இருந்து எல்லியிடம் இருந்து போன். 

இந்த இடத்தில் நான் எல்லியைய்ப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். எல்லி, என் மகள் நிவியைக் காட்டிலும் ஒரிரண்டு வயது பெரியவள் என்று நினைக்கிறேன். ஆனால் பார்த்தால் ஒரு 10 வயதுக்கு மேல் சொல்ல முடியாத ஒரு குட்டையான உருவம். ஆச்சரியமாக , மிகத் தெளிவான ஆங்கிலம். எல்லி என்னுடைய  Supplier  ஒருவரின் தங்கை. ஒரு 4 வருடங்களுக்கு முன் எல்லிதான் என்னை முதலில்  Contact பண்ணியது ஒரு  Cold E mail மூலமமாக. தன் அண்ணன் புதிதாக ஒரு தொழில் ஆரம்பித்திருப்பதாகவும், அவருக்கு ஆங்கிலம் தெரியாதலால், தான் இந்த ஈ மெயிலை   அனுப்புவதாகவும், தனக்கு கொஞ்சம் பிசினஸ் தந்து சப்போர்ட் பண்ணுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தாள்.  

அவள் ஈ மெயில் கொஞ்சம் சிறு பிள்ளைத்தனமாக இருந்தாலும், என்ன Product என்றுதான்  பார்ப்போமே என்று ஒரு ஆவலில் அவள் அனுப்பிய புகைப்படங்கள் மற்றும்  Specifications  எல்லாம் பார்த்தபோது , அவை எனக்குத் தேவையான பொருட்கள்தான் என்பது புரிந்தது. அதைத் தொடர்ந்து அவளுக்குக் கிட்டத்தட்ட ஒரு வருடம் தொடர்ச்சியாக பிசினஸ் கொடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று  அவளிடம் இருந்து ஒரு ஈ மெயில் வந்தது. தான் மேற்படிப்பிற்காக பீஜிங் செல்லப்போவதாகவும் இதுவரை செய்த உதவிகளுக்கு நன்றி என்றும் சுருக்கமாக. அவளுடைய அண்ணனுக்கு ஆங்கிலம் தெரியாதலால் நானும் விட்டு விட்டேன். அதிலிருந்து ஒவ்வொரு வருடப் பிறப்பிற்கும் , Christmas – க்கும் அவளிடமிருந்து ஒரு வாழ்த்து ஈமெயில் மட்டும் தவறாமல் வந்து விடும்.

நான் இந்த முறை பீஜிங் செல்ல முடிவெடுத்ததும் எல்லியின் ஞாபகம்தான் முதலில் வந்தது. எனக்கு பீஜிங்கில் வேறெந்த  Contact –  ம் இல்லாதலால் எல்லிக்கு ஒரு ஈமெயில் அனுப்பினேன். நான் மார்ச் 15 ம் தேதி பீஜிங் வருகிறேன். எனக்கு  Great Wall of China, Forbidden City, Temple of Heaven எல்லாம்  போக வேண்டும். உனக்குத் தெரிந்த ஏதாவது டூர்  கம்பெனி அல்லது டூர் கைடை  Suggest  பண்ண முடியுமா என்று கேட்டு இருந்தேன். போதாததற்கு ” நான் வருவது புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே.  So  நீ suggest பண்ணும் கைடு ரொம்பப் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம் என்றும் சொல்ல்லியிருந்தேன்”.

அவள் கொஞ்சம் கூட யோசிக்காமல் “நீ வரும் தேதி சனி , ஞாயிறில் வருவதால் நானே வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் ” என்று பதில் அனுப்பியிருந்தாள். எனக்கு முதலில் தயக்கமாக இருந்தது “நம்ம அலையும் அலைச்சலுக்கு இந்த சிறு பெண்ணால் ஈடு கொடுக்க முடியுமா ? கொஞ்சம் எரிச்சல் பட்டாலும் நம்ம வேலை கெட்டு விடுமே ” என்று பயந்தேன். அதையே கொஞ்சம் டிப்ளமேட்டிக்காக அவளிடம் சொல்ல, ” கவலையே படாதே. நீ திருப்தியாக  படம் எடுத்து முடிக்கும்   வரை நான் பொறுமையாக இருக்கிறேன். இங்கு வெளி நாட்டவரைப் பார்த்து விட்டால் பெரும்பாலான கைடுகள் ஏமாற்றுவார்கள் (அங்கேயுமா? ???) . அதனால் உன்னை பிரச்சினையில் மாட்டி  விட எனக்கு விருப்பமில்லை” என்று பதில் அனுப்பியிருந்தாள் . எனக்கும் அவள் சொல்வது சரி என்று பட்டதால் உடனே ஒத்துக் கொண்டு விட்டேன். 

எனக்கு உடல் நலம் சரில்லாமல் போனது தெரியாமல், அவள் உற்சாகமாக பேச ஆரம்பித்து விட்டாள். பீஜிங்கில் மதியம் வரைக்கும் பனி  மூட்டமாக இருப்பதாகவும், மதியத்திற்கு மேல் நல்ல Pleasant ஆக இருப்பதாகவும்  சொல்லி விட்டு கடைசியாக ஒரு குண்டைப் போட்டாள்.  Great Wall of China மேலே செல்வதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செங்குத்தாக படிகளில் ஏற வேண்டும். கிட்டத்தட்ட Trecking போலவே இருக்கும் என்றாள் சந்தோஷமாக. Trecking போலவா ?????? அதுவும் ஒரு மணி நேரமா ??????? நான் “மலைப்பு ”  Stage தாண்டி “விரக்தி” Stage -க்குப் போனது தெரியாமல், Wrestling Umpire போல ” A….r….e…..y….o….u Ready ?” என்றாள் நீட்டி முழக்கி  ( இதுக்குத்தான் சின்னப் புள்ளைங்க சகவாசம் வச்சுக்கக் கூடாதுன்னு நம்ம ஊர் பக்கம் சொல்லுவாய்ங்கெளோ  ?). நான் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல், ஒரு மழுப்பலாக ”  I am ready. I will see you tomorrow at 9″ என்று சொல்லி விட்டு போனை வைத்தேன். 

வாழ்க்கையில், நான் அன்று போல என்றுமே குழம்பியதில்லை. என்னுடைய சைனா பயணத்தின் முக்கிய நோக்கமே இந்த பீஜிங் பயணம் தான்.  ஆனால் இந்த உடல் நிலையோடு போவது உசிதம்தானா ? அதுவும் ஒரு மணி நேரம் Trecking (?????)…..இந்த லட்சணத்தில் Great Wall of China மேலே சென்று Sun Set – ஐ படம் எடுத்து விட வேண்டும் என்று பிளான் வேறு. அதாவது கிட்டத்தட்ட மாலை 6 மணி வரை மேலேயே நின்று விட்டு அதற்கு அப்புறம் கீழே இறங்க வேண்டும். நான் முதலில் எல்லியிடம் இதைச் சொன்ன போது அவள் உடனே சரி என்று சொல்லி விட்டாள். “எனக்கு ஒன்றுமில்லை , மேலே செல்லச் செல்ல ரொம்பக் குளிரும் பார்த்துக் கொள்” என்று மட்டுமே சொன்னாள். 

‘கடவுள் மனது விட்டு சிரிக்கும் நேரம் ஒன்று உண்டு என்றால் அது மனிதர்கள் திட்டமிடும்போதுதான்’ என்று சொல்வார்கள். நான் முதலில் பீஜிங் ட்ரிப்  பிளான் பண்ணும் போது அன்னை மீனாட்சியும் அப்படித்தான் கெக்கலி போட்டு சிரித்திருக்க வேண்டும். கண்டிப்பாக ” வா மகனே … வா…..உனக்கு நான் ஒரு பிளான் வைத்திருக்கிறேன் ” என்று சொல்லியிருப்பாள்.

பீஜிங் போயே ஆக வேண்டும் என்ற ஒரு வெறியில் டாக்டர் கொடுத்த மருந்துகள் போக , நானாகவே ஒரு  Pain Killer,  ஒரு  Paracetomal  எல்லாம் சாப்பிட்டு விட்டு ஒரு 2 மணி நேரம் போல ரெஸ்ட் எடுத்து விட்டு என்னுடைய லக்கேஜை பேக் பண்ணி ஏர்போர்ட் சென்று பீஜிங் போய் இறங்கும்போது மணி இரவு 12.30. எப்படியோ ஒரு டாக்சியும் பிடித்து ஹோட்டலிலும் போய் இறங்கி விட்டேன்.Pain Killer வேலை செய்ததினாலோ என்னவோ கொஞ்சம் Relief இருப்பது போலத் தெரிந்தது. ரூமிற்குப் போய் அக்கடா என்று விழும் போது மணி 1.30. முன்னால் சொன்ன கொழுப்பின் காரணமாக அந்த நேரத்திலும் ரொம்பப் பொறுப்பாக ( ?????) என்னுடைய கேமரா Bag ஐ எடுத்து பேட்டரியை சார்ஜில் போட்டு ,  Memory Card  செக் பண்ணி, Tripod  ஐ எடுத்து ஒன்றாக வைத்து விட்டு ( ஒரு வேளை மறந்து போய் விட்டால் …..???? நாங்கல்லாம் முன் ஜாக்கிரதை முத்தண்ணா . தெரியும்ல ???), உறங்கச் சென்றேன். 

ஒரு 4 மணி இருக்கும். முதல் நாள் போலவே பயங்கர இருமலும் , அதைத் தொடர்ந்து நல்ல காய்ச்சலும் நெஞ்சு வலியும் ஆரம்பித்தது. முதல் முறையாக வலது கைப்பக்க விலா எழும்பும், அதற்கு உள்ளே உள்ள ஏதோ ஒரு உறுப்பும் ( பின்னால், அதற்குப் பெயர் Lung  ன்னு சொன்னாய்ங்கெ) ஒரு மரண வழியைத் தந்தன. பயங்கர ஓங்காரத்தோடு என் வயிற்றில் உள்ள தண்ணீர் அனைத்தும் வேறு வெளியே வந்து விட்டது ( பக்கத்து ரூமில் உள்ளவர்கள் “எவனோ நல்ல மப்பில் இருக்கிறான் ” என்று நினைத்திருக்க வேண்டும்). தலை கிறு கிறுக்க பாத் ரூமிலேயே விழுந்து விட்டேன். தட்டுத் தடுமாறி படுக்கையில் வந்து உட்காரும்போது வாழ்க்கையில் முதல் முறையாக பயம் என்ற ஒன்று வந்து என்னைச்  சோர்வடைய வைத்தது. அப்படியே சுவற்றில் சாய்ந்து கண்ணை மூடினேன். 

திடீரென்று பொட்டில் அடித்தாற்போல டெலிபோன் அடிக்க திடுக்கிட்டு எழுந்து மணியைப் பார்த்தேன். மணி  9 என்று அறிந்து அதிர்ச்சியோடு டெலிபோனை எடுக்க ”  You have a visitor” என்று  மட்டும்  சொல்லி போனை  வைத்து  விட்டாள் அந்த அழகி மீனா. என்னால் கீழே செல்ல முடியாத அளவிற்கு உடம்பு கொதித்துக் கொண்டிருந்தது. வயிற்றில் ஒண்ணும் இல்லாத காரணத்தால் எழுந்து நிற்பது கூட சிரமமாக இருந்தது. இருந்தாலும் எல்லியைப் பார்த்து நம் நிலையைச் சொன்னால் தகுந்த உதவி கண்டிப்பாகக் கிடைக்கும் என்று தோன்றியது.

சிரமத்தோடு சிரமமாக பல் விலக்கி, முகத்தையும் கழுவி, பணம், கிரெடிட் கார்ட் எல்லாவற்றையும் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு கிழே செல்ல முயற்சித்தேன். லிப்டில் இறங்கும்போதே என்னுடைய பேலன்ஸ் போய்  விட்டது. லேசாக நினைவு தப்ப ஆரம்பித்தது. லிப்டில் இருந்து வெளியே வந்து ரிசப்ஷனுக்குச் செல்ல முயற்சித்தேன். தூரத்தில் ஒரு சிறு பெண் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே  Are you Mr Murali ?  என்று கேட்பது தெரிந்தது. நான் ஆமாம் என்று சொல்ல நினைத்து அப்படியே கீழே சரிந்து விழுந்து விட்டேன்.

எனக்கு நினைவு வந்து முழிக்கும்போது மணி கிட்டத்தட்ட 12. ஒரு பெரிய மருத்துவமனையில் எனக்கு க்ளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். எல்லியும் அங்கிருந்த ஒரு டாக்டரும் கன்னா பின்னா என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் – சைனீஸ் மொழியில். நான் அவர்களைக் குழப்பத்தோடு பார்க்க, நான் கண் விழித்ததைப் பார்த்து எல்லி வேகமாக என் அருகில் வந்து ” Hi…I am Elle ”  என்றாள். ” ஹாய்…I am Murali. Pleased to meet you ” என்றேன் ( இது போல  ஒரு அறிமுகப் படலம்  வேறு யாருக்கும் வாய்த்திருக்குமா என்று தெரியவில்லை). நான் எப்படி இங்கு வந்தேன் என்றேன் – அறிந்து கொள்ளும் ஆவலில். நான் ரிசப்ஷனில் மயங்கி விழுந்து விட்டதாகவும், அவளும் அங்கு உள்ள அனைவரும் சேர்ந்து ஒரு ஆம்புலன்ஸை வரவழைத்து இந்த மருத்துவமனையில்  சேர்த்ததாகவும் கூறினாள். “மிகவும் நன்றி எல்லி . அதுசரி நீங்கள் இருவரும் ஏதோ வாக்குவாதம் புரிவது போல் இருந்தது. Any probem ?”  என்றேன்.    

அவள் சொன்ன விஷயம் ரொம்பவே ஷாக்காக இருந்தது. ” என்னிடம் இதுவரை 1200 RMB (கிட்டத்தட்ட US$ 200) வாங்கி விட்டார்கள். அது போக இப்போது 6000 RMB  ( US$ 1000) டெப்பாசிட் கேட்கிறார்கள் என்றாள்” .  “ஐயய்யோ…  என்னுடைய பாக்கெட்டில் பணம், கிரெடிட் கார்டு எல்லாம்  இருந்ததே . எடுத்துக் கொடுத்திருக்கலாமே” என்றேன் – ஒரு குற்ற உணர்வோடு. அவள் உடனே ” பணம் ஒன்றும் பிரச்சினையில்லை” என்றாள்.” பின்னே ????” என்றேன். “நீ மயக்கத்தில்  இருக்கும்போது நிறைய முறை இருமினாய். ஒவ்வொரு முறை இருமும்போதும் நெஞ்சை  இறுக்கப் பிடித்துக்  கொண்டே இருமினாய். அதனால், உனக்கு உடனே  ஒரு ஆன்ஜியோகிராம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்” என்றாள் ( நெஞ்சைப் பிடித்தால் ஆன்ஜியோவா ???? என்ன கொடுமை சரவணா. நம்ம அப்பல்லோ மாதிரி ஒரு பெரிய கார்பொரேட் மருத்துவமனையில் மாட்டிக் கொண்டோம் என்பது புரிந்தது).  

” சரி …இப்போது என்ன செய்வது” என்றேன். ” சீனியர் டாக்டரிடம் பேசச்சொல்கிறார்கள். அவர் மதியம் 3 மணிக்கு மேல்தான் வருவாராம்”. என்றாள். சரி நான்  Manage  பண்ணிக் கொள்கிறேன். நீ கிளம்பு. என்றேன். “உன்னை இந்த நிலையில் விட்டு விட்டு நான் எப்படி போக முடியும். என்னைப் பற்றி கவலைப் படாதே” என்று ரொம்ப கூலாகச் சொல்லி விட்டாள். இதற்கிடையில், அவர்கள் கொடுத்த க்ரோஸனும் , சூடான பாலும் வெளியே வராமல் வயிற்றில் தங்கியதால், அசந்து ஒரு தூக்கம் போட்டேன். ஒரு இரண்டு மணி நேரம் தூங்கியிருப்பேன் என்று நினைக்கிறேன். எனக்கு  அருகில் இருந்து யாரோ விசும்பி விசும்பி அழுவது போல சப்தம் கேட்டு விழித்தேன். பார்த்தால் எல்லிதான்  கையில் ஒரு கர்ச்சீப் வைத்துக் கொண்டு கண்ணில் வைத்து ஒத்திக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். நான் குழப்பத்தோடு ” என்ன விஷயம் எல்லி ? ஏன்  அழுகிறாய் ?” என்றேன் ( தமிழ் சினிமாக்களில் வருவது போல, டெஸ்ட் ரிசல்ட் ஏதாவது ஏடாகூடமாக வந்து விட்டதோ ? ). 

அவள் கையில் உள்ள ஒரு பேப்பரைக் காண்பித்து “இதில் நீ கையெழுத்துப் போட்டால் தான்  Discharge  பண்ணுவார்களாம்” என்றாள். அதில் எல்லாம் சைனீஸில் எழுதியிருப்பதால் அவளைக் குழப்பத்தோடு பார்த்தேன். அதில் அந்த மருத்துவமனையின் ஆலோசனைக்கு மாறாக நானே என் முழு விருப்பத்தோடு அந்த  மருத்துவமனையை விட்டு  Discharge ஆகிப்  போவதாகவும் , என் உயிருக்கு ஏதேனும் ஆபத்து என்றால் அதற்கு அந்த மருத்துவமனை பொறுப்பாகாது என்றும் எழுதியிருக்கிறது என்றாள். எனக்கென்னவோ அதில் பிரச்சினை ஒன்றும் இருப்பது போல் தெரியவில்லை ( இந்தியாவில் நாங்க இது போல் எவ்வ்வ்வளவு   பார்த்திருப்போம்…) .

” கண்ணை துடைத்துக் கொள் எல்லி. நான் கையெழுத்து போடுகிறேன். இன்று முழுவதும்  எடுத்த  டெஸ்ட்டுகளின் ரிசல்ட்டுக்களை மட்டும் தரச் சொல் . அது மட்டுமில்லாமல் இன்று இரவு எந்த பிரச்சினையும் இல்லாமல் தூங்க வேண்டும். எனவே அதற்காக ஏதேனும்  மருந்துகள் மட்டும் தரட்டும்” என்றேன். டெஸ்ட் ரிசல்ட் தர உடனே மறுத்து விட்டார்கள். ஒப்புக்கு மருந்து மட்டும் தந்து விட்டு என்னை  Discharge  பண்ணி விட்டார்கள். நானும் ஆர்க்யூ பண்ணாமல் வந்து விட்டேன். மறுநாள் காலை வருவதாக சொல்லி விட்டு எல்லியும் கிளம்பி விட்டாள்.  

அன்று இரவு, ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்பது போல் எல்லாத் தொந்தரவுகளும் மறுபடியும் வந்து விட்டன – இன்னும் கொஞ்சம் வீரியத்துடன் ( அது சரி , இந்தப் பழமொழிக்கு என்னங்க அர்த்தம் ?). நான் வழக்கம் போல் விடியலுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன் ( எப்படி முரளி இவ்வளவு கவிதைத்தனமாக  வார்த்தைகள் எல்லாம் வருகின்றன. ச்சீ  …போடா…). 

எல்லி மறுநாள் காலையில் சரியாக 8 மணிக்கு வந்து விட்டாள், இந்த முறை தன்னுடைய 4 நண்பர்களையும் அழைத்துக் கொண்டு. எல்லோரும் சேர்ந்து என்னை இன்னொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அதுவும் பிரமாண்டமாகத்தான் இருந்தது. நான் அவளை ஒரு குழப்பத்தோடு பார்க்க, “கவலைப்படாதே . இங்கு என் நண்பர்களுக்குத் தெரிந்த ஒரு டாக்டர் இருக்கிறார். உடனே  Diagnose  பண்ணி சரி பண்ணி விடுவார் ” என்றாள். எனக்கு அப்பாடா என்றிருந்து.   

மிக ஆச்சரியமாக அந்த டாக்டர் அழகான ஆங்கிலத்தில் பேசினார். என்னுடைய பிரச்சனைகளை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு சர சரவென்று சில டெஸ்ட்டுகளை எடுக்க உத்தரவிட்டார். அந்த மருத்துவமனையில் அந்தப் பெண்மணி சீனியர் டாக்டர் போலிருக்கு. அவரின் உத்தரவிற்கு அந்த மருத்துவமனையே ஆடியது. ஒரு இரண்டு மணி நேரத்தில் X Ray, Blood Test  எல்லாம் பார்த்து விட்டு,” உனக்கு  வந்திருப்பது  Pneumonia. உன்னுடைய  Sputtam Formation- ஐப் பார்த்தால் இது கொஞ்ச நாளாகவே இருந்திருக்கிறது போலிருக்கு. சரியான நேரத்தில் கவனிக்காதலால், இரண்டு  Lungs ம் சிவியராக Infect  ஆகி இருக்கிறது. உடனே , heavy medication  ஆரம்பிக்காவிட்டால் ஆபத்தாகி விடும்” என்றார். சொல்லி விட்டு , நான் சைனாவில் எத்தனை நாள்  இருப்பேன், என்ன பிளான் எல்லாம் கேட்டார்.நான் இன்னும் ஒரு வாரமே அங்கு இருப்பேன், அது மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு நாட்களில் நான் ஷங்காய் போக வேண்டும்  என்று சொன்னதும், அவர் முத்தில் ஒரு சிறு கலவரம் தெரிந்தது . ” டூரிஸ்ட்டா ?” என்றார் . ஆமாம் என்றதும், ” நீ ஒரு இரண்டு நாட்கள் மட்டும் இங்கு தங்க வேண்டி வரும். நான் சளியைக் கரைப்பதற்கு மருந்தும், ஒரு  Mild Anibiotic ம் தருகிறேன். அதை நீ  First Aid  மாதிரி எடுத்துக் கொண்டு எவ்வளவு விரைவில் உங்கள் நாட்டிற்குச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவில்  சென்று விடு அதுதான் நல்லது.   I am sorry to be very practical” என்றார். டூரிஸ்ட் என்றவுடன்  Heavy Medication கொடுப்பதற்கு  அவர் தயங்குவது தெரிந்தது. எனக்கும்  அது நல்ல ஐடியாவாகத் தெரிந்ததால் உடனே ஒத்துக் கொண்டு அங்கேயே அட்மிட் ஆகி விட்டேன். அவர்கள், அடுத்தடுத்து காய்ச்சல் , தலைவலி , நிமோனியா எல்லாவற்றிற்கும்  ட்ரிப்ஸ் தர, எனக்கு,   இழந்த Self Confidence ஓரளவு திரும்பி  வர ஆரம்பித்து.  

உடனே கொஞ்சமும் தாமதிக்காமல் கென்யாவில் உள்ள என்னுடைய ட்ராவல் ஏஜெண்டை தொடர்பு கொண்டு , என்னுடைய உடல் நிலையை விளக்கி விட்டு, நான் உடனே நைரோபி திரும்ப வேண்டும் . முடியுமா என்றேன். பிரச்சினையின்  தீவிரத்தை உணர்ந்து கொண்டு, ” என்னால் என்ன செய்ய இயலுமோ அதை உடனே செய்கிறேன். ஒரு 10 நிமிடத்தில் ஈ மெயில் மூலம்  Contact பண்ணுகிறேன்” என்றாள். அவள் சொன்னது போலவே ஒரு 10 நிமிடத்தில் ஈ மெயில் வந்தது,  அன்று கிளம்பும் பிளைட்டில்   Business Class – இல் மட்டும் ஒரே ஒரு     சீட்   Avaiilability இருப்பதாகவும்,   இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஷங்காய் ஏர்போர்ட்டில் இருக்க வேண்டும்,  உன்னால் முடியுமா ? என்றும்  கேட்டு. நான் இருப்பதோ பீஜிங்கில், அதுவும் மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிக்  கொண்டு. காக்க காக்க சூர்யா  போல, கையில் சொருகியிருந்த (ட்ரிப்ஸ்) ட்யூபை எல்லாம் புடுங்கிப் போட்டு  விட்டு ஓடினால் கூட , ஹோட்டலுக்குப் போய் லக்கேஜை எல்லாம் பேக் பண்ணி , பீஜிங்  ஏர்போர்ட்டுக்குப் போய் அங்கிருந்து ஷங்காய் ஏர்போர்ட்டுக்குப் போக 5 அல்லது 6 மணி நேரம் ஆகி விடும். So, “It is not possible. I am stuck in Beijing ”  என்று ரிப்ளை அனுப்பினேன். ” I am sorry. Since, few Trade Fairs are going on in China, all the flights are completely booked. If something comes up, I will let you know” என்று அவளிடமிருந்து  ரிப்ளை வந்தது. பிரச்சினை வந்தால், எல்லாம் ஒட்டு மொத்தமாகத்தான் வரும் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டு, இன்னும் ஒரு வாரம் சைனாவில் இருப்பதற்கு என்னைத் தயார் படுத்திக் கொண்டேன். 

அடுத்து வந்த இரண்டு நாட்கள் அந்த மருத்துவமனையில் இருந்து , ஓரளவிற்கு First Aid எடுத்துக் கொண்டு ஷங்காய் கிளம்பினேன். அந்த இரண்டு நாட்களும் எல்லியும் அவள் நண்பர்களும் வீட்டிற்குப் போகாமல் என்னுடனேயே இருந்தார்கள் – நான் எவ்வளவோ  சொல்லியும் கேளாமல். கிளம்பும்போது, டாக்டரின் ரிப்போர்ட், மருந்துகள் லிஸ்ட் அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதி வேறு வாங்கிக் கொடுத்து விட்டாள். அது மட்டுமில்லாமல், “தினமும் ஏதாவது சாப்பிட்டு விடு. சாபிடாமல் மருந்துகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லதில்லை ” என்று அட்வைஸ் வேறு. ஒரு சிறு பெண்ணிற்கு இவ்வளவு அக்கறை, இவ்வளவு பொறுப்பா – அதுவும் முன் பின் தெரியாத ஒரு வெளி நாட்டவனிடம் என்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவளை இவ்வளவு சங்கடத்தில் ஆழ்த்தி விட்டோமே என்று எனக்கு மன உளைச்சல் வேறு.   

ஷங்காயில் அவர்கள் கொடுத்த மருந்துகளை உட் கொண்டு விட்டு , என் வேலைகள் அனைத்தையும் முடித்தேன். அங்கிருந்த சப்ளையர்கள், எல்லி  அளவிற்கு இல்லாவிட்டாலும், நன்றாகவே உதவி செய்தார்கள். எப்படியோ சமாளித்து விட்டு, அந்த வாரக் கடைசியில் நைரோபி வந்து சேர்ந்து விட்டேன். 

நைரோபி வந்தவுடனேயே நான் வழக்கமாகப் பார்க்கும் டாக்டரிடம் போனேன் ( ஒரு தென் இந்தியர்) . அது நான் செய்த அடுத்த மிகப் பெரிய தவறு. அவர் சில டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்து விட்டு, “நிமோனியாதான், ஆனால் சீரியஸாக ஒன்றுமில்லை. சைனாவில் எடுத்த ட்ரீட்மென்ட் சரியில்லை. எனவே அவர்கள் கொடுத்த மருந்துகள் அனைத்தையும் நிறுத்தி விட்டு நான் சொல்லும்  Antibiotic சாப்பிடுங்கள் . ஒரு இரண்டு மூன்று நாட்களிலேயே எல்லாம் சரியாகி விடும்” என்றார். எனக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டது ( அட….ப்பூ  …நிமோனியா என்றால் வெறும் லுல்லுல்லாயிதானா?????) .

ஆனால் நிலைமை நாளுக்கு நாள் கேவலமாகப் போக ஆரம்பித்தது. இருமல், மூச்சுத் திணறல், நுரையீரல் வலி, காய்ச்சல்  எல்லாம் சேர்ந்து எனக்கு ஒரு மரண அவஸ்தையைத் தர ஆரம்பித்தது. சைனாவில் இருந்த நிலைமையே தேவலை என்ற என்னுடைய எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. என்னுடைய டாக்டரோ  ரொம்ப கேஷுவலாக,  நேற்றுக்கு இன்று நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு. கவலையே வேண்டாம். உங்களுக்கு இருக்கும் வலியெல்லாம்  Acidity யினால் தான் என்று அதற்கு வேறு மருந்து கொடுத்தார். இப்படியே இன்னும் ஒரு வாரம் வேறு ஓடி  விட்டது. அப்போதுதான் சுதாரித்தேன் – இவரை நம்பினால் இனி பிரயோஜனம் இல்லை, உடனே நைரோபி ஹாஸ்பிட்டல் போய் விடலாமென்று ( ம்க்கும்…இப்பவும் சுதாரிக்கா விட்டால் …வெளங்கிறும்   வெளங்கி  ).

அங்குள்ள சீனியர் Chest Physician Dr. Muhindi Wanjugu  என்பவரின் அப்பாயின்மென்ட் கிடைத்தது எனக்கே தெரியாமல் நான் செய்த ஏதோ ஒரு புண்ணியம் என்று நினைக்கிறேன். அவர் போர்க்கால அடிப்படையில் ட்ரீட்மென்ட் கொடுக்க ஆரம்பித்து விட்டார். அவரும் சில பல டெஸ்ட்டுகளை எடுக்க, நுரையீரலின்   உள்ளே ஒரு திரவம் Form ஆகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொஞ்ச நாளைக்கு முன்னால் வந்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாமே என்றார் சிறிது வருத்தத்துடன். சரி,  Better late , than, never  என்று அவரே சொல்லிக் கொண்டு , அந்தத் திரவத்தை எடுக்க ஏற்பாடுகள் செய்தார்.

மறுநாள் காலை ஒரு இந்திய மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள் – நைரோபி ஹாஸ்பிட்டலுக்குள்ளேயே . அவர் கொஞ்சம் ஸ்கேன் எடுத்துப் பார்த்து விட்டு நுரையீரலுக்குள் ஒரு ட்யூபைச் செலுத்தி அந்தத் திரவத்தை எடுத்து விடலாம் என்றார். நான் இப்போது ஒரு  Local Anesthesia கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டு, முதுகில் நான் எதிர்பாராத நேரத்தில் ஒரு ஊசியைப் போட்டு விட்டார். ” அய்யகோ …முதுகில் குத்தி விட்டீர்களே ….என் சமுதாயம் என்னை புறமுதுகிட்டு ஓடியவன் என்று நினைக்காதா…என்ன காரியம் செய்து விட்டீர்கள் டாக்டர் ” என்று சொல்ல நினைத்தேன் . ஆனால், அதை எப்படி Translate செய்வது என்று தெரியாமல் விட்டு விட்டேன்.  இந்த இதைப் பட்ட நேரத்தில் அவர் ஒரு ட்யூபைச் செலுத்தி ஒரு சிறிய குடுவை நிறைய தேன் போல் ஒரு திரவத்தை எடுத்தார். என்னுடைய சுகர் லெவல் அதிகமாக இருந்ததினாலா என்னவோ  தெரியவில்லை, அவர் கொடுத்த  Local Anesthesia  கொஞ்சம் கூட வேலை செய்யவில்லை. வலி என்றால் உயிர் போகும் வலியாய்   இருந்தது.

அதன் பிறகு என்னுடைய உடல் நிலை ஓரளவு தேறியதும், ஏராளமான நண்பர்களும், உறவினர்களும், உடன் வேலை பார்ப்பவர்களும், எங்கள்  Company -யின் Chairman -ம், M.D. யும் நேரிலும், போனிலும் நலம் விசாரித்ததும், Face Book இல் நண்பர் ஜெயக்குமார் மூலமாக நிறையப் பேர் பிரார்த்தனை செய்ததும், ஒரு சகோதரி, எனக்காக, அமெரிக்காவில் தன்  வீட்டிலேயே சிறப்பு பூஜைகள் செய்ததும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடன் சேர்ந்து என் மனைவியும் தூங்காமல் சிரமப்பட்ட நாட்கள், என் மனைவியும் என் மகளும் எனக்குத் தந்த சப்போர்ட் , …….கண்டிப்பாக நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியங்களே ( இந்த ஜென்மத்தில்  நாம செய்த புண்ணியங்கள்தான் நமக்குத் தெரியுமே )…..

வெ. பாலமுரளி.