நேற்று என் டைரியைப் படித்து விட்டு என் நண்பன் ரமேஷ், “ என்னடா, நம்ம மரக்குரங்கு விளைட்டை விட்டு விட்டாயே” என்று வருத்தப்பட்டிருந்தான். ரமேஷா…அதை எப்படிடா மறக்க முடியும். இந்த டைரியின் ஆரம்பமே அதுதான். இது போல சின்ன விஷயத்துக்கெல்லாம், மனசைத் தளர விட்டு விடக் கூடாது, சரியா?
மரக்குரங்கு (கம்பாத்தா)…..இது இன்னுமொரு இன்ட்ரஸ்டிங் விளையாட்டு. எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள N.S. M.V.P.S. School – இல் ஒரு பெரிய விளையாட்டு மைதானம் உண்டு. அதைச் சுற்றிலும் ஏராளமான புன்னை மரங்கள் உண்டு. விளையாட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து சாட் பூட் த்ரீ போட்டு, ஒரு கேனையனைத் தேர்ந்தெடுப்போம். அவனையும் இன்னொருவனையும் தவிர மற்ற எல்லோரும் மரங்களில் ஏறி விடுவோம். அந்த இன்னொருவன் , நம்ம நடராஜர் ஸ்டைலில் ஒரு காலைத் தூக்கி , ஒன்றரை முழம் உள்ள ஒரு கம்பை பலம் கொண்ட வரை வீசி எறிவான் . மாட்டிகொண்டவன் அதை ஓடிப் போய் எடுத்து வர வேண்டும் . அவன் வருவதற்குள், கம்பை விட்டு எறிந்தவனும் மரத்தில் ஏறி விடுவான். மாட்டிக்கொண்டவன், கம்பை கீழே வரைந்திருக்கும் ஒரு வட்டத்தில் போட்டு விட்டு ( வாழ்க்கை ஒரு வட்டம்டா ) , மரத்தில் ஏறி யாராவது ஒருவனைத் தொட வேண்டும். மற்றவர்கள் கீழே தொங்கும் ஏராளமான கிளைகளின் மூலமாக கீழே குதித்து அந்த கம்பை தொட்டு விட்டால், முதலில் மாட்டிக் கொண்டவன் திரும்பவும் ஓட வேண்டும். ஒரு வேளை அவன் யாரையாவது தொட்டு விட்டால், அவன் ஓட வேண்டும். விளையாட்டு நடக்கும் போது நாங்கள் எல்லோரும் வௌவ்வால் மற்றும் குரங்கு போல மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டிருப்போம். இந்த விளையாட்டு எல்லோரையும் பரபரப்பாகவும் ரொம்ப அலர்ட்டாகவும் வைத்திருக்கும். எனக்கு ரொம்பப் பிடித்த விளையாட்டு.
எங்கள் வீட்டின் Drive Way – யில் எப்போதுமே இரண்டு வாகனங்கள் பார்க் செய்யப் பட்டிருக்கும். ஒன்று, சைக்கிள் ரிம் with a Driving Stick . அந்தக் குச்சியை அந்த ரிம்மில் அழுத்திப் பிடித்துக் கொண்டே முன்னே தள்ளினா , அது ஓடும் பாருங்க….செம ஸ்பீடு. அந்தக் குச்சியை வலது கைப் பக்கமாக அழுத்தினால், வண்டி இடது பக்கமாகத் திரும்பும் & Vice Versa. வண்டியின் முன்புறம், குச்சியை பக்கவாட்டில் வைத்து அழுத்தினால், வண்டியின் ஸ்பீடு குறைந்து , வண்டியை உங்க கன்ட்ரோலில் கொண்டு வர முடியும். இதில், ரேக்ளா ரேஸ் மாதிரி பந்தயங்களும் நடத்தியதுண்டு..
இரண்டாவது வாகனம்….நொங்கு வண்டி. தென்னை மரம், வாழை மரம் போல ஏராளமான வளங்களைத் தரும் இன்னொரு மரம், பனைமரம். அதில் A- Z எல்லாவற்றையுமே நாம் Use பண்ணலாம். அதில் உள்ள நொங்கைத் தோண்டி எடுத்து அல்லது உறிஞ்சி எடுத்து சாப்பிட்ட பின், அதைத் தூக்கிப் போட மாட்டோம். அது போல இரண்டு நொங்குகளை எடுத்து, இரண்டையும் நடுவில் ஓட்டை போட்டு, ஒரு ஸ்ட்ராங்கான குச்சியின் மூலம் இணைப்போம். பிறகு ( V Shape இல் உள்ள) கவட்டையுடன் கூடிய ஒரு நீண்ட குச்சியை அடுத்து அந்த Bridge – இல் வைத்து ஒரு Force கொடுத்தால், அது ஓடும் பாருங்க… எனக்கென்ன உனக்கென்ன என்று. செம Fun. முதல் வாகனம் போலவே இதிலும் ரேஸ் உண்டு. பந்தயம் தீப்பெட்டி லேபிள் மற்றும் ஸ்டாம்பு.
கிட்டிப் புள் ( கில்லி )….செம விளையாட்டு. அதிலும் தெருவுக்குத் தெரு மாட்ச் உண்டு. ஒரு முறை ஜெயிக்க வேண்டுமென்ற வெறியுடன் அதை அடிக்கப் போய் , அது ஒரு பொடியனின் கண்ணுக்கு மேல் பட்டு இரண்டு அங்குலத்திற்கு கண்ணம்பட்டை கிழிந்து விட்டது. ஐந்தாறு தையல். ரத்தம் கொட்டி விட்டது. விளையாடும் போது கீழே விழுந்து கல்லில் அடி பட்ருச்சுப்பா என்று சொல்லி என்னைக் காப்பாத்தி விட்டு விட்டான் ( நிஜ நண்பேண்டா )…
பொன்வண்டு….மிக மிக அழகான ஒரு வண்டினம். அது முள்ளு முள்ளாக இருக்கும் ஒரு மரத்தில் இருக்கும். அதை மிக ஜாக்கிரதையாகப் பிடித்து ஒரு சின்ன அட்டை டப்பாவில் போட்டு அதில் கொஞ்சம் முறுக்கு, அதிரசம், புல்லு எல்லாம் போட்டு ( முறுக்கும் அதிரசமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். So, பொன்வண்டுக்கும் பிடிக்கும் என்று நானே நினைத்துக் கொள்வேன்) அதை வளர்ப்போம். முடிந்த வரை அதைப் பள்ளிக்குக் கொண்டு போக மாட்டேன். நான் வளர்ப்பது தெரியாமல், ஒரு பையன் ( முத்துராமன்) தனக்கு மட்டும் தான் அந்தக் கலை ( ????) தெரியும் என்று உதார் விட , அவன் மூஞ்சியில் கரியைப் பூச , மறுநாள் என் வண்டைக் கொண்டு போனேன். நான் கொஞ்சம் அசந்திருக்கும் நேரத்தில் அதை யாரோ சுட்டு விட்டார்கள். எனக்கு முத்துராமன் மீதுதான் சந்தேகம். கடைசி வரை கிடைக்கவேயில்லை. ஏனோ அதற்குப் பிறகு நான் பொன்வண்டு வளர்க்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டேன் ( அதனால் யாருக்கும் நஷ்டமில்லை ராசா )…..
இதுபோல இன்னும் ஏராளமான விளையாட்டுக்கள்…..நான் நாளை இந்தியா செல்ல இன்னும் Packing பண்ணலை …. So, இத்துடன் முடித்துக் கொள்கிறேன்….கோபித்துக் கொள்ளாதீர்கள் பாலாஜி… By the way, நானும் பாலாஜியும் சந்தித்துக் கொண்டது ஒரு முழு டைரிக்கான Subject . இருந்தாலும் சுருக்கமாக சொல்லி விடுகிறேன்…
நானும் Yu பாலாஜியும் ( இப்போ Idea பாலாஜி), நம்ம தமிழ் பண்பாட்டு மன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி பார்த்துக் கொள்வோம் . ஆனால் பேசிக் கொண்டதில்லை. எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்தான் ஆஸ்தான புகைப்படக் கலைஞர். அவர் எடுக்கும் விதமும், ஒவ்வொரு படம் எடுத்து முடிந்த பிறகு அவர் செட்டிங்கை உடனுக்குடன் மாற்றும் விதமும், எனக்கு அவரைப் பார்த்தால் ஒரு பிரமிப்பாக இருக்கும். சரி , அவரு Professional Photographer போலிருக்கு. நாமெல்லாம் போய் பேசினால் திரும்பப் பேசுவாரா என்ற சந்தேகத்துடனும், பயத்துடனும் நான் விலகி விடுவேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் தன் மனைவி கீதா மூலமாக என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு ” சரி…இவன் பெரிய Photographer போலிருக்கு. நம்மிடமெல்லாம் இவன் பேசுவானா ” என்று அவரும் நினைத்து விலகி விலகிப் போயிருக்கிறார். ஒரு நாள் கீதா புண்ணியத்தில் நாங்கள் இருவரும் அறிமுகப் படுத்திக் கொண்டோம். கொஞ்சம் கூட யோசிக்காமல் நான் Photography மற்றும் கேமரா வைப் பற்றிப் பேச்சுக் கொடுக்க, கொஞ்சம் நேரத்திலேயே எங்கள் இருவருக்குமே தெளிவாகப் புரிந்து போயிற்று நாங்கள் இரண்டு பேருமே டம்மி பீஸ்தான் என்று. பின்னர் நாங்கள் பார்க்கும் போதெல்லாம் இதை நினைத்து நினைத்து விழுந்து விழுந்து சிரிப்போம்.
என்னுடைய இந்த டைரியையும் இதற்கு முந்தின டைரியையும் எழுதுவதற்குத் தூண்டுகோலே பாலாஜிதான். நாங்கள் அவர் வீட்டிற்கு ஒரு முறை டின்னர் சென்றிருக்கும்போது ( மாங்காய் ஊறுகாய் சூப்பர் கீதா ) , இந்த விளையாட்டுக்கள் பற்றி பேச்சு வந்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம்.( கீதாவுக்கும் என் மனைவி அர்ச்சனாவுக்கும் வெறுத்து விட்டது). இந்த இரண்டு டைரியையும் எழுத முடிவு செய்தது அன்றுதான்.
Thank you Balaji. Thank you so much for the wonderful time that we had spent in Nairobi. I am truly missing you my friend. Please come back to Kenya.
வெ. பாலமுரளி.