மாரா ஓர் மந்திரலோகம்…
என்னதான் காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும், இந்த தம்மாதூண்டு ஈக்களிடம் சிங்கங்கள் தோற்று விடும்.
அதுவும் வேட்டை முடிந்து , அதை ருசிக்கத் தொடங்கும் முன்னரே ஈக்களின் ராஜாங்கம் தொடங்கி விடும். சிங்கங்களின் முகத்தில் இருக்கும் ரத்தம் ஈக்களுக்குக் கொண்டாட்டம்.
அவற்றை விரட்டவும் முடியாமல், கொரோனா போல அவற்றுடன் சேர்ந்து வாழவும் முடியாமல் ரொம்ப அவஸ்தைப்படும். அவை படும் பாடு, சில சமயம், நமக்கே பரிதாபமாக இருக்கும்.
வல்லவனுக்கும் உண்டு வல்லவன் இந்த வையகத்தில் என்பது நிரூபணமாகும்.
என்னதான் நாம் நிலவு வரை போய் விட்டாலும் கூட, ஒரு கொசு நம்மை வலைக்குள் சிறை வைத்து விடுமே – அது போல.
வெ.பாலமுரளி